காட்டுமன்னார்கோவில் : அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் - அடிக்கல் நாட்டு விழா

காட்டுமன்னார்கோவில் : அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் - அடிக்கல் நாட்டு விழா
அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் - அடிக்கல் நாட்டு விழா
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் அமைத்துள்ள திருச்சின்னப்புறம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளிக்கு, சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கலந்துக் கொண்டு, கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது அரசு அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story