விவசாயிகளுக்கு நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி பயிற்சி

விவசாயிகளுக்கு நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி பயிற்சி

அம்பாசமுத்திரத்தில் நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.  

அம்பாசமுத்திரத்தில் நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் அம்பாசமுத்திரத்தில் நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி என்ற தலைப்பில் விவசாயிகள் பயிற்சி வட்டார அளவில் இன்று நடைபெற்றது.

இந்த பயிற்சியை வேளாண்மை துணை இயக்குனர் சோபியா தலைமையேற்று நடத்தினார்.அவர் சிறுதானியங்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார்.நெல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் பயிறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி கூறினார்.இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story