ஊத்துமலையில் பண்பாட்டுப் போட்டிகள்

ஊத்துமலையில் பண்பாட்டுப் போட்டிகள்

பண்பாட்டு போட்டிகள் 

ஊத்துமலையில் பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் உள்ள 13 பள்ளிகளை சோ்ந்த 226 மாணவா்கள் பங்கேற்று நினைவாற்றல், ஒப்பித்தல், கதை சொல்லுதல், கட்டுரை, பேச்சு, இசை, ஓவியம் வரைதல் மற்றும் விநாடி வினா போட்டியில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினா். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஊத்துமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் செல்வி தலைமை வகித்தாா். விவேகானந்தா கேந்திர தென்காசி மாவட்ட அமைப்பாளா் கண்ணன் முன்னிலை வகித்தாா். ஸ்ரீசாந்தானந்தா சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். ஆலங்குளம் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் டாக்டா் வி.அன்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திர பொறுப்பாளா் கருப்பசாமி, கேந்திர ஆசிரியா்கள் மஞ்சு, வேணி, ஊத்துமலை சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story