கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

பரிசளிப்பு விழா

கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா கடந்த 18ம் தேதி முதல் துவங்கப்பட்டு 21ம் தேதி வரை நடந்தது. இதில் நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஓவியம், இசை, நடனம்,தமிழ் பேச்சுப் போட்டி, ஆங்கில பேச்சுப் போட்டி, பரதம், குழு நடனம், இசை போன்றவை உள்பட 37 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. நிறைவு விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம்,ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, பேரூராட்சி தலைவர் சரவணன், வேட்டவலம் பேரூராட்சி துணைத்தலைவர் ரங்கன் ஆகியோர் முன்னிலை வகிக்க வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்துவிளக்கேற்றி வைத்து போட்டிகளில் முதலிரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை யும், 3ம்இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குசான்றிதழ்களையும் வழங்கி பேசுகையில் மாணவர்கள்கலை ஆர்வத்தையும் திறனையும் வளர்த்துக் கொள்ளும் வகையிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் கலை திருவிழாவை தொடங்கி நடத்தி வருகிறது. வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், சி.என்.அண்ணா துரை எம்.பி கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் கல்வியோடு எந்த துறையில் ஆர்வமாக இருக்கிறதோ அதில் முழு கவனம் செலுத்தி சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். அடுத்த தலைமுறையினரை உருவாக்குகின்ற சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. அதனை ஆரோக்கியமான முறையில் உடற்பயிற்சி, யோகா இதற்கான அடிப்படை கல்வி. உங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்ற நிகழ்ச்சி தான் கலைத் திருவிழா. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று எதிர்காலத்தில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதில் கீழ்பென்னாத்தூர், கொளத்தூர் ஆகிய மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேவாசீர்வாதம், கருணாகரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநி- திகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். விழாவின்போது மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. விழா நிகழ்ச்சியினை ஜமீன் அகரம் பள்ளி தலைமையாசிரியர் முருகன் தொகுத்து வழங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வம் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கலைத் திருவிழா குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story