திருப்போரூர் அருகே சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

திருப்போரூர் அருகே சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

திருப்போரூர் அருகே உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


திருப்போரூர் அருகேஉலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில், உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், உடற்பயிற்சி மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சைக்கிள் விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. சைக்கிள் பேரணியை, கானத்துார் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் படூர் ஊராட்சி தலைவர் தாரா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். சிறியவர்களுக்கான 10 கிலோ மீட்டர், பெரியவர்களுக்கான 30 கிலோ மீட்டர் என, இரு பிரிவுகளாக நடந்த பேரணியில், அரசு பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story