மேலூரில் தலித் இளைஞர் படுகொலை - விசிக சாலை மறியல்

மேலூரில் தலித் இளைஞர் படுகொலை - விசிக சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் 

மேலூர் அருகே தலித் இளைஞரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரைமேலூர் மலம்பட்டியை சேர்ந்த தலித் இளைஞர் அய்யனார் (24) என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் சாதிய வன்மத்தில் படுகொலை செய்து ஆத்துக்கரைபட்டியில் சாலையில் உள்ள கண்மாயில் உடலை வீசிவிட்டு சென்றுவிட்டனர். தகவல்அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமணையில் உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

படுகொலை செய்தவர்களை உடனே கைது செய்ய கோரி மதுரை கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் அரச முத்துப்பாண்டியன் தலைமையில் பஞ்சமி நிலமீட்பு இயக்க மாநில செயலாளர் மேலார் சசி. மண்டல துணைச் செயலாளர்' அய்யாவு சந்திரமோகன். துறை அகரன். வெள்ள தமிழர் சுப்புராம். உள்ளிட்ட மாவட்ட, நகர் பேரூர். முகாம். கிளை பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பெண்கள், பொது மக்கள் மேலூர் மெயின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து 1 மணிநேரம் பாதிப்பு ஏற்ப்பட்டது

Tags

Next Story