வத்தலகுண்டு போலீஸ் ஸ்டேஷனில் பட்டாசு வெடித்து விபத்து

வத்தலகுண்டு போலீஸ் ஸ்டேஷனில் பட்டாசு வெடித்து விபத்து

காவல் நிலையம் 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் ஒரு அறையில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தில் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் ஒரு அறையில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் பறிமுதல் செய்த பட்டாசுகளை தனி அறையில் வைத்து பூட்டி இருந்தனர். இந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறுகின்றன. பட்டாசுகளை பறிமுதல் செய்தால் உடனடியாக அவற்றை அழித்துவிட வேண்டும் என அரசு அரசு உத்தரவிட்டிருந்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால் சிக்கல் நீடிக்கிறது.

Tags

Next Story