பொய்குனம் கிராமத்தில் விழல்கள் எரிந்து சேதம்

பொய்குனம் கிராமத்தில் விழல்கள் எரிந்து சேதம்

 தீயணைப்பு வீரர்கள்

சங்கராபுரம் அருகே பொய்குனம் கிராம மலைக்குன்று அடிவாரத்தில் விழல்கள் எரிந்து சேதமானது.
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே பொய்குனம் கிராம மலைக்குன்று அடிவாரத்தில் விழல்கள் எரிந்து சேதமானது. சங்கராபுரம் அடுத்த பொய்குனம் கிராமத்தில் மலைகுன்று உள்ளது. குன்றின் அடிவாரத்தில் விழல்கள் அதிகளவில் வளர்ந்திருந்தன. நேற்று காலை மர்மமான முறையில் விழல்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த தீயில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விழல்கள் எரிந்து சேதமாயின.

Tags

Next Story