பஸ் படிக்கட்டு உடைந்து விழுந்து சேதம்

பஸ் படிக்கட்டு உடைந்து விழுந்து சேதம்

மானாமதுரையில் அரசு பஸ்சின் படிக்கட்டு உடைந்து விழுந்தநிலையில், அதில் பயணித்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  

மானாமதுரையில் அரசு பஸ்சின் படிக்கட்டு உடைந்து விழுந்தநிலையில், அதில் பயணித்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கைக்கு தினமும் காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மானாமதுரையிலிருந்து சிவகங்கைக்கு புறப்பட்ட அரசு பேருந்தில் மாணவர்கள் பயணம் செய்த போது, பைபாஸ் ரயில்வே கேட் அருகே பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் அதில் பயணம் செய்த அனைவரும் கீழே இறங்கி விடப்பட்டு, மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story