மண் குவாரியால் விவசாயம் பாதிப்பு - ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

மண் குவாரியால் விவசாயம் பாதிப்பு - ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

மனு அளிக்க வந்தவர்கள் 

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே செங்குளிப்பட்டி, சிறுசெங்குளிப்பட்டி, துவரிப்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் செங்குளிப்பட்டியில் புஞ்சை நிலத்தில் குவாரி மண் அள்ள அனுமதி பெற்றுள்ளனர். இதனால் எங்களது கிராமங்களும், கிராமங்களை சுற்றியுள்ள கிராமங்களும் பாதிப்படையும் நிலையில் உள்ளது. மேலும் நீர்நிலை ஆதாரமாக பொதுப்பணித்துறை நீர்ப்பாசன செங்குளிக்கண்மாய்க்கு வரும் நீர்வழி போக்குவரத்து பாதிப்படைவதோடு 200 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. மேலும் கால்நடை மேய்ச்சல் தண்ணீர் வசதி இல்லாமல் பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே மண் குவாரி குத்தகை உரிமம் வழங்கியதை மறுபரிசீலனை செய்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்

Tags

Next Story