தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்

தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்

 துறையூர் அருகே கானாபாடி, நரசிங்கபுரத்தில் தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  

துறையூர் அருகே கானாபாடி, நரசிங்கபுரத்தில் தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கானாபாடி மற்றும் நரசிங்கபுரத்தில் உள்ள விவசாயிகள் சுமார் 200 மேற்ப்பட்ட ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் தொடர்ந்து ஒரு மாத காலமாக மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளதாகவும் இதனால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். உடனடியாக தமிழக அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story