சரக்கு லாரி மோதியதில் மின் கம்பம் சேதம்....

சரக்கு லாரி மோதியதில் மின் கம்பம் சேதம்....

மின் கம்பம் சேதம்

சரக்கு லாரி மோதி மின் கம்பம் சேதம். உடனடியாக சீர் செய்த மின்வாரிய ஊழியர்களுக்கு போதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

சரக்கு லாரி மோதி மின் கம்பம் சேதம். உடனடியாக சீர் செய்த மின்வாரிய ஊழியர்கள். கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள பி.வெள்ளாளப்பட்டி துணை மின் நிலையம் அருகே இன்று காலை சரக்கு லாரி அப்பகுதிக்கு வந்தது. அப்போது லாரி டிரைவர், லாரியை திருப்ப முயற்சித்துள்ளார்.

லாரி நீளமான வாகனமாக இருந்ததால் சாலையோர கம்பத்தில் லேசாக மோதியதில், மின் கம்பம் உடைந்தது. இதனால் மின் விநியோகம் தடைபட்டது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதிகாரிகள் உடனடியாக ஊழியர்களை அழைத்துச் சென்று, மின் கம்பத்தை சரி செய்து உடனடியாக மின் வினியோகமும் வழங்கினர். இதனால் அப்பகுதியில் நடக்க இருந்த பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story