ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு செல்லும் சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு செல்லும் சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

சேதம் அடைந்துள்ள சாலை

ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு செல்லும் சாலை சரிவடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அடுத்த ஏக்கல் மலை கிராமத்திற்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் கிராம மக்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திற்கு பல கோடி ரூபாயில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சாலையில் அதிக ஏற்றம் காரணமாக வளைவுகளில் உள்ள சாலைகள் சரிந்து கீழே விழுந்தது. காலப்போக்கில் தற்போது அதிக மழை காரணமாக மலை கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. மேலும் ஆபத்தான வளைவுகளில் சாலைகள் விரிச்சல் விட்டு சரிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் மக்கள் கடந்து செல்லும் அச்சப்பட்டு வருகின்றனர்.

பல மாதங்களாக பொதுமக்கள் இது குறித்து கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வருகின்றனர். இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால்,

உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. உடனடியாக இந்த சாலை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags

Next Story