ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை - விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை - விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 சேதமடைந்த சாலை 

சேதமடைந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் தாயார் குளம் தெருவில் இருந்து, அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா வழியாக பல்லவர்மேடு, மடம் தெரு, பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பூங்கா அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாலும், மழையின் காரணமாகவும் மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து உள்ளது. இதனால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை சேதமடைந்த பகுதியில், திடீரென வேகத்தை குறைக்கும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி, விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story