நடனமாடி வந்து வேட்பு‌ மனு தாக்கல் நீலகிரி நாம் தமிழர் வேட்பாளர்!

நடனமாடி வந்து வேட்பு‌ மனு தாக்கல்  நீலகிரி நாம் தமிழர் வேட்பாளர்!

 நாம் தமிழர் வேட்பாளர்

நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதி வேட்பாளர் ஜெயக்குமார் நடனமாடியபடியே பேரணியாக வந்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாருக்கு இன்று காலை காஃபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய 11.30 முதல் 01.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் நாம் தமிழர் கட்சியினர் காஃபி ஹவுஸ் சந்திப்பில் ஒன்றிணையவே சுமார் ஒரு மணியாகிவிட்டது. அங்கிருந்து கேசினோ ஜங்சன், ஸ்டேட் வங்கி வழியாக நடனமாடியபடியே வேட்பாளர் ஜெயக்குமார் கட்சி தொண்டர்கள் படை சூழ பேரணியாக வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். சுமார் 02.30 மணியளவில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உறுதிமொழி ஏற்பின் போது "தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உறுதியேற்கிறேன்" என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் உறுதிமொழி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story