விவசாய நிலத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பியால் அபாயம்

விவசாய நிலத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பியால் அபாயம்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

செய்யூர் அருகே விவசாய நிலத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பியால் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட் டம், செய்யூர் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இங்கு நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்ப்பூசணி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.

செய்யூர் அருகே அமந்தங்கரணை கிராமத்தில், போந்துார் செல்லும் சாலையோரத்தில் உள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயரழுத்த மின்கம்பிகள் தலையில் முட்டும் அளவிற்கு தாழ்ந்து செல்வதால், டிராக்டர்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மேலும், இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், மின் கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அவலநிலையும் உள்ளது. பலத்த காற்று வீசினால், மின் கம்பிகள் அறுந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும், வயல்வெளியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள், விவசாய நிலத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பி களை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story