சிவகாசி அருகே தாழ்வாக செல்லும் மின்சார வயர்களால் பெரும் ஆபத்து

சிவகாசி அருகே தாழ்வாக செல்லும் மின்சார வயர்களால் பெரும் ஆபத்து
சிவகாசி அருகே தாழ்வாக செல்லும் மின்சார வயர்களால் பெரும் ஆபத்து...
சிவகாசி அருகே தாழ்வாக செல்லும் மின்சார வயர்களால் பெரும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் எஸ்.என்.புரம் கிராம மக்கள் அச்சம்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் தென் திருப்பதி நகர்,நாயக்கர் நடுத்தெரு மற்றும் சாரதா நகர் பள்ளி வாசல் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

இங்கு வசிக்கும் மக்கள் நலன் கருதி சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்படுகிறது.இந்த பகுதியில் ஒரு மின்கம்பத்தில் இருந்து மற்றொரு மின்கம்பத்திற்கு செல்லும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்கிறது.

இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளதால்,போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.மேலும் வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள்,மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள்,அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆபத்து ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story