நாட்றம்பள்ளி அருகே வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்

நாட்றம்பள்ளி அருகே வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள்

நாட்றம்பள்ளி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் கே.பந்தாரப்பள்ளி ஊராட்சியில் 4 வது வார்டு மற்றும் 6 வது வார்டு பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல்,

பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சரவணன் இடம் கேட்டால் தங்களை ஊராட்சி தலைவர் ஒருமையில் பேசுவதாகவும் கூறி இன்று வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் இளமதி ஆகியோர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலிசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலிசார் அளித்த வாக்குறுதியை ஏற்று வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது..

Tags

Next Story