அருமனை அருகே மாமியாரை தாக்கிய மருமகள் கைது

அருமனை அருகே மாமியாரை தாக்கிய மருமகள் கைது

பைல் படம்

அருமனை அருகே மாமியாரை கட்டையால் தாக்கிய மருமகள் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு தோட்டத்து விளை பகுதியைச் சேர்ந்தவர் யசோதா. இவர் - கணவரை பிரிந்து சிதறால் பகுதியில் வசித்து வருகிறார். யசோதா தனது மகனின் பிள்ளை களை பார்ப்பதற்காக மஞ்சாலுமூடுக்கு சென்றார். அப்போது மருமகள் அஸ்வினி யசோதாவை திட் டியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் யசோதாவை - அஸ்வினி அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறதுஇதில் படுகாயமடைந்த யசோதா சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்தநிலையில் யசோதாவை தாக்கிய அஸ்வினியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story