கள்ளக்குறிச்சியில் மகள் மாயம்: தாய் போலீசில் புகார்

கள்ளக்குறிச்சியில் மகள் மாயம்: தாய் போலீசில் புகார்

காவல் நிலையம்

கள்ளக்குறிச்சியில் மகள் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டை சேர்ந்தவர் வடிவேல் மகள் அகிலா, 19; உடல் நிலை சரியில்லாத மகள் அகிலாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அவரது தாய் தனலட்சுமி கடந்த 25ம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அ

ங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ரிப்போர்ட் பெறுவதற்காக தாய், மகள் இருவரும் காத்திருந்தனர். ரிப்போர்ட் வாங்குவதற்காக தாய் தனலட்சுமி மருத்துவமனைக்குள் சென்றார். ரிப்போர்டை பெற்றுக்கொண்டு வந்து பார்த்தபோது அகிலாவை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

அகிலாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரில் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story