மகள் மாயம் - தாய் புகார்

பெரியேரிப்பட்டியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டியில் வசிக்கும் பொன்னுசாமி அலமேலு தம்பதியினரின் மகள் தனலட்சுமியை கடந்த 6வருடங்களுக்கு முன்பு திருச்செங்கோட்டை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இதையடுத்து தம்பதியினரின் மருமகன் அடிக்கடி குடிபோதையில் மகளுடன் வாய் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தங்களது மகள் கணவனை பிரிந்து பெரியேரிப்பட்டியில் உள்ள அவர்களது வீட்டில் தனலட்சுமி வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி இரவு 8 மணியளவில் மகள் தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது மகள் 15 நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார் என்றும், அவரை தாரமங்கலம் நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வரும் சுரேஷ் என்பவர் அழைத்துச் சென்று இருக்கலாம் எனவும், மகளை கண்டுபிடித்து தருமாறும் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story