தாய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் மகள்கள்

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னாசாகரம் பகுதியில் வீடு வீடாக சென்று, தனது தாய் சௌமியா அன்புமணிக்கு வாக்கு சேகரித்த மகள்கள்
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அவரது மகள்கள் சங்கமித்ரா,சஞ்சுத்ரா ஆகியோர் தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னாசாகரம் பகுதியில் வீடு வீடாக சென்று தனது தாய் சௌமியா அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டனர். இந்த தொகுதியில் எங்களது தந்தை அன்புமணி ராமதாசை தொடர்ந்து தாயரும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவார் தர்மபுரி மாவட்டம் பாடுபடுவார் பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் களத்தில் இறங்குவார் பெண்ணுரிமைக்காக போராடும் சௌமியா அன்புமணியை வெற்றி பெற செய்யுங்கள் என பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story