அழகிய சிங்கபெருமாள் கோவிலில் தவன உற்சவம் துவக்கம்

அழகிய சிங்கபெருமாள் கோவிலில் தவன உற்சவம் துவக்கம்

 சிங்கபெருமாள் கோவில்

ஸ்ரீதேவி, பூதேவியருடன் அழகிய சிங்கபெருமாள் வெங்கடாத்ரி கொண்டையுடன், மலர் அலங்காரத்தில், மங்களகிரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
காஞ்சிபுரத்தில், திருவேளுக்கை அழகிய சிங்கபெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான தவன உற்சவம் நேற்று மாலை துவங்கியது. உற்சவத்தையொட்டி மூலவர் சன்னிதி முன் நறுமணம் கமழும் தவனம் மற்றும் பல்வேறு மலர்களால் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பந்தலில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அழகிய சிங்கபெருமாள் வெங்கடாத்ரி கொண்டையுடன், மலர் அலங்காரத்தில், மங்களகிரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவு நாளான மார்ச் 1ல், சுவாதி நட்சத்திரத்தையொட்டி, காலை 10:30 மணிக்கு தாயார், பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு தவன அலங்கார சேவையும், இரவு 7:00 மணிக்கு சன்னிதி உள்புறப்பாடு நடக்கிறது.

Tags

Next Story