நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட டிடிஎப் வாசன்

நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட டிடிஎப் வாசன்
நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் டிடிஎப் வாசன் 2 ஆவது நாளாக கையெழுத்திட்டார்.

சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக TTF வாசன் மீது ஏழு பிரிவின் கீழ் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜாமீன் வழங்கிய மதுரை மாவட்ட நீதிமன்றம் 10 நாட்களுக்கு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இரண்டாம் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் வந்த TTF வாசன் கையெழுத்திட்டார்.

3 நாட்களுக்குள் TTF வாசனின் செல்போனை ஒப்படைக்க மதுரை அண்ணா நகர் காவல் நிலையம் சம்மன் வழங்கியுள்ளது அந்த சம்மனை ஏற்றுக்கொண்டு TTF வாசனின் செல்போனை திங்கள் கிழமை (ஜீன் 3 ஆம் தேதி) மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வாசனின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் வெளியே நேற்று கண்ணீர் மல்க அழுது வீடியோ வெளியிட்ட ரசிகர்களை சந்தித்து காவல் நிலையத்தின் அருகில் சாலை சாலை ஓரத்தில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது டிடிஎஃப் வாசன் யாரும் அழ வேண்டாம் நான் இருக்கிறேன் என ஆறுதல் தெரிவித்ததோடு மதுரையில் தான் மஞ்சள் வீரன் ஆடியோ ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்தார்

மேலும் மதுரை எனக்கு நன்கு பழகி விட்டதாக கூறிய டிடிஎப். வாசன் தொடர்ந்து ரசிகர்களை கட்டிப்பிடித்து செல்பி எடுத்து அனுப்பி வைத்தார் அப்போது சில ரசிகர்கள் Flying கிஸ் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர் அப்போது பேசிய ரசிகர்கள் : TTF வாசன் அரசியலுக்கு வரமாட்டார், நடிகர் விஜய்க்கு எங்கள் TTF வாசன் அண்ணனுக்கு போட்டியில்லை இருவரையும் கம்பேர் பண்ணால் பெரிய பிரச்சனை ஆகிரும்!! வாசன் ரொம்ப நல்லவரு!!! என்றார்

Tags

Next Story