ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சடலம்: காவல்துறையினர் விசாரணை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சடலம்: காவல்துறையினர் விசாரணை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆண் சடலம் கிடந்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆண் சடலம் கிடந்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை என்.உச்சனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி இவர் தேன்களிக்கோட்டையில் மக்கடை நடத்தி வந்தார். கடந்த 6ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரம் ஆகியும், அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஒகேனக்கல்லில் பாசிமடுவு என்ற இடத்தில், முரளி சடலமாக கிடந்தார். தகவலின் பேரில், இன்று ஒகேனக்கல் காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, முரளிதற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து வீசி சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story