இறந்த நிலையில் பெண் சடலம்

இறந்த நிலையில்  பெண் சடலம்

 திண்டுக்கல் அருகே பெண் சடலத்தை மீட்ட போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

திண்டுக்கல் அருகே பெண் சடலத்தை மீட்ட போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகே பெண் கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் அருகே கோவிலூர் ஓட்டைக்குளத்தை சேர்ந்த சூசை மாணிக்கம் மகள் அமலோற்பவ மேரி. திருமணமாகாதவர். ஓட்டக்குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடிநீர் தொட்டி அருகே இறந்த நிலையில் கிடந்தார் . இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெண்ணின் உறவினர்கள் கூறியதாவது:இறந்த பெண்ணுக்கு சொத்து தகராறு ஏற்கனவே இருக்கிறது. இந்நிலையில் அவர் கழுத்து காயங்களும் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைமுக கொலையாக தெரிகிறது போலீசார் விசாரணையை தீவிர படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story