மயிலாடி அருகே தோப்பில் முதியவர் சடலம் !

மயிலாடி அருகே தோப்பில் முதியவர் சடலம் !

முதியவர் சடலம்

மயிலாடிபுதூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இறந்த நிலையில் முதியவர் சடலம் மீட்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியை அடுத்த மயிலாடி புதூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (64). இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். தொழிலாளியான சந்திரசேகருக்கு மது அருந்து பழக்கமும் இருந்துள்ளது. மேலும் கடந்த மூன்று வருடத்திற்குள் இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இவர் மயிலாடிபுதூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்திரசேகர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனைக்கு பின் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story