ரயில் நிலைய பிளாட்பாரத்தில் சென்னை வாலிபர் பிணம்

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் சென்னை வாலிபர் பிணம்

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் சென்னை வாலிபர் பிணம்

அரக்கோணம் ரயில் நிலைய நடைமுறை அருகே சடலமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை அரக்கோணம் ரயில் நிலைய 5-வது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு பயணிகள் தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் அரக்கோணம் ரயில்வே மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் டாக்டர்கள் அங்கு வந்து பரிசோதனை செய்தபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிய வந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் சென்னை சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பால்ராஜ், உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story