மயிலாடி அருகே மாயமான முதியவர் குளத்தில் பிணமாக மீட்பு !

மயிலாடி அருகே மாயமான முதியவர் குளத்தில் பிணமாக மீட்பு !
சடலம்
மயிலாடி அருகே மாயமான முதியவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியை அடுத்த குலசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் பகவதி கண்ணுபிள்ளை (82 ). இவருடைய மனைவி வள்ளியம்மாள். இவர்களுடைய ஒரே மகள் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பகவதி கண்ணு பிள்ளைக்கு வயது மூப்பின் காரணமாக சரிவர கண் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வள்ளியம்மாள் மருந்து வாங்க நாகர்கோவிலுக்கு சென்றார். மருந்து வாங்கி விட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த பகவதி கண்ணுபிள்ளையை காணவில்லை. அவரை பல இடங்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பகுதியில் உள்ள குளத்தில் பகவதி கண்ணுபிள்ளை பிணமாக மிதந்தார். இது குறித்து தகவல் அறிந்த அஞ்சு கிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பகவதி கண்ணு பிள்ளை நடந்து சென்ற போது குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story