புளியந்தாங்கல் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்!

புளியந்தாங்கல் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்!

செத்து மிதக்கும் மீன்கள்

ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கத்தரி வெயில் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வெயிலின் தாக்கம் காரணமாக நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில், ராணிப்பேட்டையிலிருந்து திருவலம் செல்லும் சாலையில் உள்ள புளியந்தாங்கல் ஏரியில் குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது. ஓரமாக தேங்கியுள்ள தண்ணீரில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. ஏரி அருகில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story