கரூர்: தலைக்கேறிய போதை... சோகம்

அரவக்குறிச்சி அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நபர் குடிபோதையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வேலம்பாடி அருகே உள்ள சௌந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் வயது (44). செந்தில்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் மே 2-ம் தேதி மாலை 5 மணி முதல், 3-ம் தேதி மதியம் 2 மணி வரை சௌந்தராபுரத்தில் அவரது வீட்டின் அருகே தலையில் காயம் ஏற்பட்டு, கீழே கிடந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் இதனை பார்த்து செந்தில்குமாரின் மகள் தீபதர்ஷினி என்பவருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து, தனது தந்தையை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீபதர்ஷினி அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த செந்தில்குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story