தண்ணீர் தேடி வந்த மான் உயிரிழப்பு

தண்ணீர் தேடி வந்த மான் உயிரிழப்பு
மான் பலி 
கொளகம்பட்டி காப்புப்காடு பகுதியில் இருந்து, தண்ணீர் தேடி வந்த மான் ஒன்றை தெரு நாய்கள் துரத்தி கடித்ததில் மான் உயிர் இழந்தது.

தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாமி நகரை ஒட்டியுள்ள கொளகம்பட்டி காப்புப்காடு பகுதியில் இருந்து, நேற்று தண்ணீர் தேடி வந்த மான் ஒன்றை தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்தது. அங்கிருந்த பொதுமக்கள் நாய்களை துரத்தி அடித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர், காயமடைந்து உயிருக்கு போராடிய 2 வயது பெண் மானை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மான் இறந்துவிட்டது. இதையடுத்து, மானின் உடலை வனத்துறை அலுவலக வளாகத்தில் புதைத்தனர்.

Tags

Next Story