விஜயகாந்த் மறைவு: மவுன ஊர்வலம்

கறம்பக்குடியில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் திரைப்பட நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவையொட்டி அணைத்து கட்சி சார்பில் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மொளன ஊர்வலம் நடைபெற்றது திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது ஆத்மா சாந்தி அடைய புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் தேமுதிக கட்சி தொண்டர்களால் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்வில் அணைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்று கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சீனிகடை முக்கத்திலிருந்து பேருந்து நிலையம், உள்கடை வீதி, அம்புக்கோவில் முக்கம் வழியாக ஊர்வலமாக வந்து மொளன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அணைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்று மொளன அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story