விஜயகாந்த் மறைவு; அதிமுக.,வினர் மலரஞ்சலி

விஜயகாந்த் மறைவு; அதிமுக.,வினர் மலரஞ்சலி

  நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் மறைவை முன்னிட்டு, கோவையில் அதிமுக.,வினர் மலரஞ்சலி செலுத்தினர். 

நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் மறைவை முன்னிட்டு, கோவையில் அதிமுக.,வினர் மலரஞ்சலி செலுத்தினர்.

கோவை:தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை சென்னை தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் அவரது உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பிரதமர், பிற மாநில முதல்வர்கள் என பலரும் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் விஜயகாந்த் க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் பீளமேடு துரைசாமி, அம்மா பேரவை செயலாளர் பிரபாகரன், பகுதிகழகச் செயலாளர்கள் காட்டூர் செல்வராஜ், MGJ.ராஜ்குமார், சௌரிபாளையம் வெள்ளிங்கிரி, உலகநாதன் சாரமேடு சந்திரசேகர், உக்கடம் கணேசன், மெளனசாமி, சிங்கை பாலன், பாசறை மாவட்ட செயலாளர் பப்பாயா ராஜேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags

Next Story