இளைஞருக்கு கொலை மிரட்டல்
விருதுநகர் அருகே இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர் அருகே கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் வயது 19. இவர் ரோசல்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பு சென்று கொண்டிருந்த பொழுது கம்மாபட்டி சார்ந்த அஜய் என்பவர் சந்தோஷையை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகவும் சந்தோஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் அஜய் மீது ஊரக காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story