பேக்கரி ஊழியருக்கு கொலை மிரட்டல் - 6 பேர் மீது வழக்கு

பேக்கரி ஊழியருக்கு கொலை மிரட்டல் - 6 பேர் மீது வழக்கு

பைல் படம் 

நாகர்கோவிலில் பேக்கரி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (28) தனியார் ரத்த வங்கி ஊழியரான இவர் உறவினர் ஒருவர் பேக்கரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவ தினம் பேக்கரிக்கு வடசேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி உட்பட ஆறு பேர் சென்றுள்ளனர். பேக்கரியில் வைத்து விஷ்ணுவுக்கும் கிருஷ்ணவேணிக்கும் திடீரென வாக்குவாதங்கள் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி தரப்பினர் விஷ்ணுவை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த விஷ்ணு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லுரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரியின் பேரில் கிருஷ்ணவேணி உட்பட 6 பேர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story