பிடிஓவிற்கு கொலை மிரட்டல் - ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் கைது

பிடிஓவிற்கு கொலை மிரட்டல் - ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் கைது

தெய்வமணி

மிரட்டலில் ஈடுபட்டவர் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் சிவசங்கர். இவருக்கு குண்டவெளி ஊராட்சிமன்ற தலைவரின் கணவரான தெய்வமணி என்பவர் சமூக வலைதளம் மூலம் கடுமையான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சிவசங்கர் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் தெய்வமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story