விவசாயிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது!

விவசாயிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது!

கைது

சாத்தான்குளம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் அய்யாத்துரை மகன் சக்திவேல்(28). விவசாயியான இவர் சம்பவத்தன்று சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகரில் பைக்கில் சென்றார். அப்போது அங்கு வந்த முதலூரைச் சேர்ந்த பாஸ்கர் மகன் பட்டு என்ற லிவிங்ஸ்டன்(25) என்பவர் சக்திவேலிடம் ஊருக்குள் வரக்கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சக்திவேல் அளித்த புகாரின்பேரில் தட்டார் மடம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஏசுராஜசேகரன் வழக்கு பதிந்து பட்டு என்ற லிவிங்ஸ்டனை நேற்று கைதுசெய்தார். கைதான பட்டுஎன்ற லிவிங்ஸ்டன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கொலைமிரட்டல், அடிதடி உள்ளிட்ட 12 வழக்குகள்உள்ளதால் அவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story