குமரி: பெண்ணுக்கு கொலை மிரட்டல்
பெண்ணுக்கு கொலை மிரட்டல்
புதுக்கடை அருகே வீடு புகுந்து பெண்ணின் சேலையை பிடித்து இழுத்த கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் லலிதா. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுந்தர். ஓட்டுநர். நேற்று லலிதா தனது கணவருடன் வீட்டில் இருக்கும் போது, கையில் கம்பியுடன் லலிதா வீட்டில் அத்துமீறி நுழைந்த சுந்தர் லலிதாவை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
பின்னர் அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட் களை அடித்து நொறுக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் லலிதாவின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்துள்ளார். இது தொடர்பாக லலிதா புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிங் என்ற சுந்தர் மீது இன்று வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story