விளையாட்டு மைதானத்தில் வீடு கட்டமுயற்சி தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் !

விளையாட்டு மைதானத்தில் வீடு கட்டமுயற்சி தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் !

 வழக்கு பதிவு

மயிலாடுதுறை அருகே முருகன் தோட்டம் மேலத்தெருவில் விளையாட்டு மைதானத்தை ஒட்டி வீடு கட்ட முயற்சித்தவர்களை தட்டி கேட்டவருக்கு அடி உதை கொலை மிரட்டல் மூன்று நபர்கள் மீது வழக்கு
மயிலாடுதுறை அருகே உள்ள முருகன் தோட்டம் மேல தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி பிரேமா (53) இவர் சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்தபோது அவர் வீட்டுக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கீழத் தெருவை சேர்ந்த திருஞான சம்மந்தம் மகன் அழகர் அவர் சகோதரர் மாதவன் அழகர் மனைவி கவிதா ஆகிய மூவரும் சேர்ந்து வீடு கட்டுவதற்கு இடத்தை சுத்தம் செய்து வந்தனர். இதுகுறித்து பிரேம இந்த இடம் விளையாட்டு மைதானம் அதில் அத்துமீறி நுழைந்து இதுபோன்ற செய்யலாமா என கேட்டதற்கு, மூவரும் சேர்ந்து கொண்டு அவரை திட்டி அடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் . இந்த சம்பவம் குறித்து பிரேமா அளித்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார் அழகர் மாதவன் அழகர் மனைவி கவிதா ஆகிய மீது பிரேமாவை அடித்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story