திருப்பத்தூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்

திருப்பத்தூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்

அம்சவேணி

திருப்பத்தூர் அருகே இடம் தொடர்பான பிரச்சனையில் தனக்கு கொலைமிரட்டல் விடுப்பதாக சம்பந்தப்பட்ட பெண் SP அலுவலகத்தில் மனு அளித்தார்.

நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த அம்சவேணி என்பவரின் தந்தை முனிராஜ் என்பவர் ஆலாங்காயம் அடுத்த காவலூர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்துள்ளார் . இந்த நிலையில் காவலர் பகுதியின் சுமார் 51/2 சென்ட் இடம் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவருடைய மகளான ஆம்சவேணி என்பவருக்கு தான கிரையமாக கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குடும்ப சூழ்நிலை காரணமாக அம்சவேணி 4.5 லட்ச ரூபாய்க்கு செந்தில் என்பவருக்கு அடமானம் வைத்துள்ளார். அதன் பின்பு மாத மாதம் ரூபாய் 12500 வட்டி பணம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது இதற்கிடையில் அம்சவேணிக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்ததால் ஆலாங்காயம் அருகே உள்ள நன்னெறி பகுதியை சேர்ந்த முரளி என்பவருக்கு 11 லட்சத்திற்கு காலி மனையை விற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து செந்தில்,முரளி, புரோக்கர்கள் பன்னீர், சிங்காரம் ஆகியோர் இணைந்து அவசர அவசரமாக முரளி பேரில் பத்திர பதிவு செய்துள்ளனர்.

அம்சவேணி இடத்தை முழுவதுமாக அளக்க வேண்டும் என ஆன்லைன் பதிவு செய்திருந்த நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் முரளி,செந்தில் புரோக்கர்கள் சிங்காரம் பன்னீர் அதே பகுதியை சேர்ந்த ரேஞ்சர் சிகாமணி ஆகியோர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை கொண்டு அம்சவேணியின் உடன்பாடு இல்லாமல் இடத்தை அளந்து அளவுகள் நட்டுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த அம்சவேணி இது குறித்து திருப்பத்தூர் எஸ்பி அலுவலகம் வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் ஆலங்காயம் காவல் நிலையம் ஆகிய இடங்களில் மனு கொடுத்து உள்ளார். இதனால் முரளி, செந்தில் ,புரோக்கர் சிங்காரம், பன்னீர் ரேஞ்சர் சிகாமணி ஆகியோர் அம்சவேணியின் தங்கையான கவிதா குடும்பத்திற்கும், அம்சவேணிக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது தொடர்பாக இன்று அம்சவேணி திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story