சேலம் சிறை அலுவலர்களுக்கு புதிய சட்டங்கள் குறித்த பயிற்சி

சேலம் சிறை அலுவலர்களுக்கு புதிய சட்டங்கள் குறித்த பயிற்சி

சேலம் சிறை அலுவலர்களுக்கு புதிய சட்டங்கள் குறித்த பயிற்சியை நீதிபதி வழங்கினார்.


சேலம் சிறை அலுவலர்களுக்கு புதிய சட்டங்கள் குறித்த பயிற்சியை நீதிபதி வழங்கினார்.
சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சேலம் மத்திய சிறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு புதிய சட்டங்கள் குறித்த பயிற்சி நேற்று சிறை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-5 நீதிபதி பிரவின்குமார் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார். இதுகுறித்து சிறை சூப்பிரண்டு வினோத் கூறுகையில், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியச்சட்டம் ஆகியவற்றில் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட சட்டங்கள் குறித்து நீதிபதி விரிவாக விளக்கம் அளித்துள்ளார் என்றார். இந்த பயிற்சியில் சிறை நிர்வாக அலுவலர் ஜோசப், துணை சிறை அலுவலர் சிவா, சூப்பிரண்டுகள் சங்கர், பாலு, கண்ணன், நல அலுவலர் அன்பழகன் உள்பட அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story