தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் பிரச்சனை: 2 பெண்கள் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் பிரச்சனை: 2 பெண்கள் தற்கொலை

கோப்பு படம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் கடன் பிரச்சனையால் 2 பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி லட்சுமி (52). இவர் மகளிர் சுய உதவிக் குழு தலைவியாக உள்ளார். குழுவில் கடன் வாங்கிய உறுப்பினர்கள் பலர் திருப்பி செலுத்தவில்லையாம். இதனால் வங்கியில் பணத்தை கட்ட முடிாயாமல் லட்சுமி தவித்துள்ளார்.

இந்நிலையில் லட்சுமி நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செ்யது கொண்டார். இதுகுறித்து நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மற்றொரு சம்பவம் தூத்துக்குடி தேவர் காலனி 4வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ மார்த்தாண்டம் மனைவி சுடலை வடிவு (37).

இவர் அதிகமாக கடன் வாங்கியதால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லையாம். இதில் மனவேதனையடைந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செ்யது கொண்டார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story