கைத்தறி வடிவமைப்புக்கான போட்டி விண்ணப்பிக்க டிச 31 கடைசி நாள்

கைத்தறி வடிவமைப்புக்கான போட்டி விண்ணப்பிக்க டிச 31 கடைசி நாள்

கைத்தறி வடிவமைப்புக்கான போட்டி விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்

கைத்தறி வடிவமைப்பாளர்கள் , ஜவுளிதொழில் நுட்பம் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கன்னியாககுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இளம் தலைமுறையினரிடையே கைத்தறி ரகத்தின் மீது பிணைப்பை ஏற்படுத்த மாநில அளவில் இளம் கைத்தறி வடிமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்ய ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், வடிவமைப்பு நிறுவனங்கள், ஜவுளி தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு இடையே இப்போட்டி நடத்தப்படுகிறது.போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் முதல் 3 சிறந்த வடிவமைப்புகளுக்கு முதல் பரிசாக ₹1,00,000, இரண்டாம் பரிசாக ₹75,000 மற்றும் மூன்றாம் பரிசாக ₹50,000 வழங்கப்படும்.

பங்கேற்பாளர்களின் தகுதி, வடிவமைப்புகளில் உள்ள துணை வகைகள், விதிமுறைகள் மற்றும் வடிவமைப்பு நுழைவு நிபந்தனைகள் போன்றவைகள் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வழிகாட்டுதல்கள், வடிவமைப்பு நுழைவுப்படிவம் மற்றும் வடிவமைப்பை அனுப்ப வேண்டிய முகவரியின் விவரங்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் உள்ளன.இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து மாநில அளவிலான சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள தகுதியான பங்கேற்பாளர்கள் 31.12.2023 அன்று அல்லது அதற்கு முன் கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வடிவமைப்பு உள்ளீடுகளைச் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story