அடிப்படை வசதிகள் கோரி தேர்தல் புறக்கணிக்க முடிவு!

அடிப்படை வசதிகள் கோரி தேர்தல் புறக்கணிக்க முடிவு!

அடிப்படை வசதி

அடிப்படை வசதிகள் கோரி கிராமமக்கள் லோக் சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக போஸ்டர் அச்சிட்டு ஒட்டியுள்ளனர்.
திருமயம்: அரிமளம் ஒன்றியம் கல்லூர் ஊராட்சியை சேர்ந்தது சுதந்திரபுரம். இங்கு ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. குடிநீர் ஊரணியை துார்வாரி சுற்றுச்சுவர் கட்டித்தரவும், சமுதாயக்கூடம் கட்டவும், மயானத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றக்கோரி யும் கிராமமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த கிராமமக்கள் லோக் சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக போஸ்டர் அச்சிட்டு ஒட்டியுள்ளனர்.

Tags

Next Story