ஒரு லட்ச ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

ஒரு லட்ச ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

ஒரு லட்ச ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஆண்டுதோறும் கோவையை அருகே காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரித்து தனலட்சுமி அலங்கார பூஜை செய்யப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள 100,200,500 ரூபாய் நோட்டுக்களை பெற்றுகொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட அலங்காரத்தை பொதுமக்கள் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டு வரும் நிலையில் வருடா வருடம் அலங்காரம் செய்யப்படும் ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை அதிகரித்திக்கு கொண்டு வருகிறது.

ஆனால் இந்தாண்டு தேர்தல் காரணமாக ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் மட்டும் அலங்காரம் செய்யப்பட்டது. தனலட்சுமி பூஜை வழிபாடுகள் முடிவடைந்த பிறகு அந்தந்தப் பகுதி பொது மக்களுக்கு அந்த நோட்டுக்கள் திருப்பி அளிக்கப்படும்.சென்ற ஆண்டு ஆறு கோடி ரூபாய் பணமும் வைரம் மற்றும் தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story