தீபதிருவிழா: அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

தீபதிருவிழா: அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

அகல்விளக்கு தயாரிப்பு பணியில் தொழிலாளர்


தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மலை உச்சியில் கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். உலகில் உள்ள சிவபக்தர்கள் தீப திருநாளை முன்னிட்டு அகல்விளக்குகளை ஏற்றி வைத்து தீபத்திருநாளை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.

செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபத்திருநாளை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் 7 நாட்கள் வரை வீடு, கடை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் அகல்விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.

இந்த நிலையில் செங்கம் பகுதியில் தீபம் ஏற்றுவதற்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். செங்கம் பகுதியில் தயாரிக்கப்படும் தீப விளக்குகள் செங்கத்தை தாண்டி பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Tags

Next Story