சிவகாசியில் உயிருடன் மீட்கப்பட்ட புள்ளி மான்

சிவகாசியில் உயிருடன் மீட்கப்பட்ட புள்ளி மான்
சிவகாசியில் உயிருடன் மீட்கப்பட்ட புள்ளி மான்....
சிவகாசியில் உயிருடன் மீட்கப்பட்ட புள்ளி மான்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி - விஸ்வநத்தம் அருகேயுள்ள வெற்றிலையூரணி பகுதியில் காப்புக்காடு உள்ளது.இங்கு மான், மிளா உள்ளிட்ட காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.இந்த நிலையில், 2 வயதுள்ள புள்ளிமான் ஒன்று இரை தேடி வெற்றிலையூரணி ஊர் பகுதிக்கு வந்தது.வழி தவறிய அந்த புள்ளிமான்,அந்தப் பகுதியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள், புள்ளிமான் கிணற்றுக்குள் விழுந்தது குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்த, சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமானை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.மீட்கப்பட்ட புள்ளிமான், வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story