அவதூறு வழக்கு - சி.வி.சண்முகம் மீதான வழக்கு ஒத்திவைப்பு

அவதூறு வழக்கு - சி.வி.சண்முகம்  மீதான வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக எம்பி சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் 
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைடுத்த நாட்டார் மங்கலத்தில் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தரக்குறைவாகவும் அவதூறாகவும் விமர்சித்து பேசியதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பரமணியம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணைக்காக கடந்த மாதம் 9 ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதனைதொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதிபதி பூர்ணிமா வழக்கு விசரானை 6.11.2023 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் சி.வி.சண்முகம் இரண்டாவது முறையாக இவ்வழக்கில் நேற்று ஆஜரானார். அதனை தொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதிபதி மீண்டும் வழக்கு விசாரனையை 21.11.2023 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags

Next Story