முதல்வா் குறித்து அவதூறு பேச்சு - கட்சி நிறுவனர் கைது !

முதல்வா் குறித்து அவதூறு பேச்சு -  கட்சி நிறுவனர் கைது !

கைது

தமிழக முதல்வா் குறித்து, முல்லை நில தமிழா் விடுதலைக் கட்சி நிறுவனா் கரும்புலி கண்ணன் அவதூறாகப் பேசியதால் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி அருகே டிசம்பா் 2023இல் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக முதல்வா் குறித்து, முல்லை நில தமிழா் விடுதலைக் கட்சி நிறுவனா் கரும்புலி கண்ணன் அவதூறாகப் பேசினாராம். இது தொடா்பாக புளியங்குடி போலீஸாா் வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனா். இந்நிலையில், கடையத்தில் தலைமறைவாக இருந்த அவரை, புளியங்குடி காவல் உதவி ஆய்வாளா் சஞ்சய்காந்தி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

Tags

Next Story